ராமநாதபுரம், ஏப்.9-
ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டி கருத்தரங்கு “என் கல்லூரி கனவு” நிகழ்வு இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு முன்னிலை வகித்தார். செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி, தாட்கோ மேலாளர் விஜயபாஸ்கர், இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் கனக ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டிகள் பற்றி இராமநாதபுரம் மாவட்ட MMT ஒருங்கிணைப்பாளர் ரகுபதி, ஹரிஸ் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் கருத்துக்கள் வழங்கினர். விடுதி காப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இக்கருத்தரங்கில் 500 மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு உயர் கல்வி ஆலோசனைகளும் கல்லூரி கட்டண விவரங்களையும் தெரிந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. உதவி கணக்கு அலுவலர் காளிமுத்து நன்றி கூறினார்.



