தூத்துக்குடி, ஜன. 7 –
மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டிக்கான பரிசளிப்பு விழா, நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரெய்லி கண்காட்சி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் K.B பிரம்ம நாயகம், முதன்மைக் கல்வி அலுவலர் ரா. சங்கீதா சின்னராணி, மாநில மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் மெய்கண்டன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் பல மாவட்டகளில் இருந்து பார்வைற்றோர், மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் IBN AL HAYTHAM BRAILLE வாழ்நாள் சாதனை விருது முனைவர் வே. சுகுமாரன் அவர்களுக்கு
வழங்கப்பட்டது. டிரஸ்டி டாக்டர் முகம்மது நஸீர் பிஸியோதெரபிஸ்ட், பிரெய்லி கண்காட்சி மற்றும் உலக பிரெய்லி தினத்தை பற்றி சிறப்புரையாற்றினார். டிரஸ்டி ஆர்க்கிடெக்ட் முகம்மது ஹயாஸ் அவர்கள் பார்வைற்றவர்களின் தேவைகளை பற்றியும், அவர்களின் வாழ்வியலை பற்றியும் எடுத்துரைத்தார்.
தூத்துக்குடியில் பார்வைற்றவர்களுக்கு பள்ளிக்கூடம் இல்லை, வரும் கல்வியாண்டில் தூத்துக்குடியில் பார்வைற்றவர்களுக்கு பள்ளிக்கூடம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை டிரஸ்டின் சார்பாக அரசிற்கு வைக்கப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், இலவச வீடு, இவர்களுக்கு கிடைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மதுரை புனித ஜோசப் பார்வையற்றோர்
பள்ளிக்கு சிறந்த பள்ளி விருது கிடைத்தது.
முதல் பரிசு கோயமுத்தூர் ராமகிருஷ்ண மிஷனல் மாணவி பரணி ஸ்ரீயும், 2ம் பரிசு மதுரை புனித ஜோசப் பள்ளி மாணவன் சிவக்குமாரும், மூன்றாம் பரிசு திருச்சி அரசு பார்வையற்றவர் பள்ளி
மாணவி வனிதா, நான்காம் பரிசு சேலம் அரசு பார்வையற்றவர் பள்ளி மாணவர் அபினேஷ் குமாரும் வாங்கினர். சிறப்பு ஆசிரியர் ரிகானா பர்வின் நன்றி உரையாற்றினார்.



