மயிலாடுதுறையில் இருந்து சமயபுரத்திற்கு பாதயாத்திரையாக புறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள்.
மயிலாடுதுறையில் இருந்து பாதயாத்திரையாக ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு இன்று புறப்பட்டு சென்றனர். ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் பாதயாத்திரை பக்தர்கள் 25 வது ஆண்டாக நடத்தக்கூடிய இந்த பாதயாத்திரையில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கங்கணம் கட்டிக்கொண்டு பக்தர்கள் புகழ்பெற்ற காவிரி துலா கட்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர். அப்போது ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அருள் வந்து ஆடியது அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் முன் செல்ல ஏராளமான பக்தர்கள் சமயபுரத்திற்கு பாதையாத்திரையை துவங்கினர். மேலும் வழி நெடுகிலும் பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.