குளச்சல், மே- 21.
திங்கள் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட திங்கள் சந்தை ராதாகிருஷ்ணன் கோவில் முதல் மார்க்கெட் செல்லும் சாலை வரை அலங்கார தரைக்கற்கள் அமைக்க
வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் பிரின்ஸ் எம்எல்ஏ விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த பணியின் தொடக்க விழா இன்று நடந்தது. திங்கள் நகர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெமினிஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் சுமன், வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெயசிங், செயல் தலைவர் வேணுகோபால் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே டி உதயம் கலந்து கொண்டார். பிரின்ஸ் எம்எல்ஏ அலங்கார கற்கள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.