மயிலாடுதுறை அருகே மறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாதிரி ஐநா சபை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பின்னர் பல்வேறு நாடுகளின் அதிபர்களாக பாவித்து மாணவர்கள் மட்டும் பங்கேற்ற ஐநா சபையில் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மற்றும் விவசாயம் , மாற்று எரிசக்தி உள்ளிட்டவைகள் குறித்து ஐநா சபை தலைவர்கள் முன்னிலையில் அந்தந்த நாட்டு அதிபர்கள் விவாதம் நடத்தினர். நான்கு குழுக்களாக பிரிந்து நடைபெற்ற இந்த விவாதத்தில் முக்கிய பிரச்சினைய தேர்வு செய்து இறுதியாக நடைபெறும் கூட்டத்தில் விவாதித்தனர். அக்கூட்டத்திற்கு பின்பு அப்பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தலைவர் மோகன்ராஜ், துணைத் தலைவர் சட்டநாதன், பொருளாளர் செந்தில்குமார், செயலாளர் ராமதுரை,மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பல்வேறு சமுதாய பிரச்சனைகளை விவாதித்தது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பாராட்டுகளை பெற்றது.



