கருங்கல், மார்-8
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மிடாலம் ஊராட்சி உதயமார்த்தாண்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இரண்டு வகுப்பறைகள், கழிவறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்எல் ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து புதிய கட்டிடங்கள் கட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூபாய் 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பள்ளி வகுப்பறையில் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
ராஜேஷ் குமார் எம்எல்ஏ பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகர், மிடாலம் ஊராட்சி தலைவர், பள்ளி தலைமை ஆசிரியர் விஜி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புனிதா உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.