கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், தொரப்பள்ளி கிராமத்தில் டைட்டான் நிறுவனம் சார்பாக, சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், மியாவாக்கி காடு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி .வி.ஆர்.லதா ஆகியோர் துவக்கி வைத்தனர். உடன், ஓசூர் சார் ஆட்சியர் .பிரியங்கா டைட்டான் நிறுவன மேலாண்மை இயக்குநர் .பி.கே.வெங்கட்ட ரமணன், பயோட்டாசோயில் ஃபவுண்டேஷன் நிறுவனர் .செந்தில்குமார், உதவி வன பாதுகாவலர் .அம்புல்கர் யஷ்வந்த் ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



