தமிழக அரசு சார்பில் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் மூலம் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது அதனை அமைச்சர் ஆய்வு செய்தார்
அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன்,கடனாநதி அணை,பிரசித்தி பெற்ற பொட்டல்புதூர் பள்ளிவாசல்,மற்றும் குற்றாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு பணிகளை குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பெண் சுற்றுலாப் பயணிகள் உடைமாற்று அறையில் 10 ரூபாய் வாங்கப்படுவதாகவும் மேலும் அதில் சரியான அடிப்படை வசதிகள் இல்லை எனவும் சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து உடனடியாக அதை சரி செய்ய வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் உடைமாற்றும் அறை மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார் தொடர்ந்து பழைய குற்றால அருவி வனத்துறை கட்டுப்பாட்டிலா அல்லது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா என பல்வேறு தரப்பில் சர்ச்சை எழுந்து வரும் நிலையில் இது குறித்து பேசி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பின்னர் கீழப்பாவூர் பெரிய குளத்தில் படகு சவாரி அமைப்பது குறித்து ஆய்வு பணியில் மேற்கொண்டார்..
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா ,வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் USD சீனிவாசன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.