ராமநாதபுரம், பிப்.25-
தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கூட்டுறவுத் துறையின் மூலம் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். இதனையொட்டி ராமநாதபுரம் நகரில் உள்ள முதல்வர் மருந்தகம் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் வர்த்தகம் தெரு ராமேஸ்வரம், கிருஷ்ணா தியேட்டர் அருகில் பரமக்குடி, கமுதி மண்டபம் வாலாந்தரவை திருப்பாலைக்குடி திருவாடானை செல்வநாயகபுரம் முதுகுளத்தூர் அபிராமம் அரண்மனை ராமநாதபுரம் வெளிப்பட்டணம் ஆனந்தூர் ஆர் எஸ் மங்கலம் கீழமுந்தல், கடலாடி திருவள்ளுவர் நகர் பரமக்குடி, பாம்பூர் பரமக்குடி, திருவரங்கம் முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. முதல்வர் மருந்தகங்கள் மூலம் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மருந்துகளின் வகைக்கேற்ப குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் ஜுனு, ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், நகர்மன்ற கவுன்சிலர் தனபாண்டியம்மாள், கூட்டுறவுத்துறை கண்காணிப்பு அலுவலர் மீனாட்சி சுந்தரம், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.