ஈரோடு மே 29
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் வீட்டுவசதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 4,142 பயனாளிகளுக்கு ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் நலன் கருதி ஒவ்வொரு துறைகளின் மீதும் தனிகவனம் செலுத்தி அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தாய்மார்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கட்டுமான தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 67,481 பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.54.39 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் மிகுந்த அக்கறை கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி
பதிவுபெற்ற கட்டுமானத்தொழிலாளர்களுக்கான
வீட்டுவசதித்திட்டத்தின் கீழ் சொந்தமாக வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதியுதவி 35 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு 156 பயனாளிகளுக்கும், கல்வி உதவித்தொகை 1986 பயனாளிகளுக்கும், மகப்பேறுக்கான உதவித்தொகை 156 பயனாளிகளுக்கும், திருமண உதவித்தொகை 2 பயனாளிகளுக்கும், கட்டுமானப் பணியிடத்து விபத்து மரண நிவாரண நிதியுதவி 2 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரணத்தொகை 45 பயனாளிகளுக்கும், விபத்து மரண நிவாரண நிதியுதவி 2 பயனாளிகளுக்கும், கண்கண்ணாடி உதவித்தொகை 19 பயனாளிகளுக்கும், ஓய்வூதியம் 779 பயனாளிகளுக்கும், நலவாரிய உறுப்பினர் பதிவு அட்டை 960 பயனாளிகளுக்கும் என மொத்தம் 4142 பயனாளிகளுக்கு ரூ.5,75,70,200 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் திரு.பொன்குமார், மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரிய செயலாளர் ஜெயபாலன் , தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரிய செயலாளர் முனைவர். திவ்வியநாதன் தொழிலாளர் இணை ஆணையர் மாதவன், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), முனைவர் முருகேசன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.