சுசீந்திரம்.ஜன.25
சுசீந்திரம் அருகே உள்ள ஆசிரமம் வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் சுடலை 52 இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் இவர் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்துபிழைப்பு நடத்தி வருகிறார் பசுமாடுகளை பழையாற்றின் மறு கரையில் அமைந்துள்ள வடகரை பகுதியில் கொட்டகை அமைத்து பராமரித்து வந்துள்ளார் மாடுகளை பார்ப்பதற்காக நேற்று தனது வீட்டு அருகே உள்ள பழையாற்றை கடக்கும் பொழுது மயங்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார் அருகே குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளனர் இது குறித்து அவரது மனைவி பகவதி யம்மாள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்