By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > ஆன்மிகம் > மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
ஆன்மிகம்

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

Last updated: June 4, 2024 6:17 pm
June 4, 2024 52 Views
Share
SHARE

ஜூன் 4, 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா

ஆன்மீக நூல்கள் அனைத்தும் பக்தியோடு தமிழ் இலக்கியத்தையும் வளர்த்தன, அவ்வாறு பாடப்பட்ட ஒரு நூலே மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.பிள்ளைத் தமிழ் என்பது தமிழின் தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. ஒரு குழந்தைப் பிறந்தது முதல் வளர்வது வரையான அணைத்து பருவங்களையும் பற்றிக் கூறுவது பிள்ளைத்தமிழ்.

பிள்ளைத்தமிழ் ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் என பத்துப் பருவங்களைக் கொண்டது. இதில் முதல் ஏழு பருவமும் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவானவை. சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பது ஆண்பால் பிள்ளைத்தமிழ்க்கு உரியது. இம்மூன்று பருவங்களுக்குபப் பதிலாக கழங்கு, அம்மனை, ஊசல் என்ற மூன்று பருவங்கள் பெண்பால்  பிள்ளைத்தமிழ்க்கு உரியவை. அன்பு தருவதிலே உனைநேர் ஆகும்ஓர் தெய்வம் உண்டோ என்று குறிப்பிடுவார் பாரதி. அன்பு செலுத்துவதற்கும் அன்பு பெறுவதற்கும் உரிய பருவம் குழந்தைப் பருவமே. புலவர்கள் தம் அன்புக்குரிய ஒருவரைக் குழந்தையாக வைத்துப் பாடிமகிழ்ந்தார்கள். இதுவே பிள்ளைத்தமிழ் ஆயிற்று இந்த வகையிலே குமரகுருபரர் மதுரையை அரசாளும் மங்கையற்கரசி அன்னை மீனாட்சியை குழந்தையாக பாவித்து இந்த மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலை இயற்றியிருப்பார். இந்த நூலானது பத்து பருவங்களையும் உள்ளடக்கி 102 பாடல்களைக் கொண்டது. தன்னுடைய ஐந்து வயது வரைப் பேசும் திறன் அற்றவராக இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளால் பேசும் திறன் பெற்றவர். அன்னையின் பிள்ளைத்தமிழ் நூலை மதுரையில் அன்னையின் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்யும் போது வருகை பருவம் பாடிய போது மீனாட்சி அம்மனே ஒரு சிறு குழந்தையாக வந்து ஒரு முத்து மாலையை பரிசாக அளித்தார். அத்துணை கலைநயமும் கேட்போர் உள்ளத்தை உருக்கும் வகையில் அமைந்திருக்கும் இப்பாடல் தொகுப்பு.

விநாயகர் வணக்கம்

கார்கொண்ட கவுள்மதக் கடைவெள்ள முங்கட்
கடைக்கடைக் கனலும்எல்லை
கடவாது தடவுக் குழைச்செவி முகந்தெறி
கடைக்கால் திரட்டஎங்கோன்

போர்கொண்ட எண்டோட் பொலன்குவடு பொதியும்வெண்
பொடிதுடி யடித்துவைத்துப்
புழுதியாட் டயராவொர் அயிராவ ணத்துலவு
போர்க்களிற் றைத்துதிப்பாம்

தார்கொண்ட மதிமுடி ஒருத்தன் திருக்கண்மலர்
சாத்தக் கிளர்ந்துபொங்கித்
தவழுமிள வெயிலுமழ நிலவுமள வளவலால்
தண்ணென்று வெச்சென்றுபொன்

வார்கொண்ட ணிந்தமுலை மலைவல்லி கர்ப்பூர
வல்லியபி ராமவல்லி
மாணிக்க வல்லிமர கதவல்லி அபிடேக
வல்லிசொல் தமிழ்தழையவே

விளக்கம்:

 தார் என்று சொல்லக் கூடிய மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்திருக்கின்ற

 மதி முடி குளிர்ச்சி பொருந்திய சந்திரனைத் தன்முடியில் அணிந்திருக்கிற சிவபெருமான். முக்கண்ணன் என அறியப்படுபவர் சிவபெருமான் சூரியனை வலக்கண்ணாகவும், சந்திரனை இடக்கண்ணாகவும், நெருப்பை நெற்றிக்கண்ணாகவும் கொண்டவர். அன்பு, அறிவு, ஆற்றலின் அடையாளமாகக் கருதப்படுவது சிவபெருமானின் திருக்கண்கள்.

இவற்றுள் வலக்கண்ணும், இடக்கண்ணும் அம்மையின் திருமார்பின்மேற் படுவதால் ஒரே காலத்தில வெம்மையும் தண்மையும் ஓரிடத்துத் தோன்றுவதால் இளவெயிலும் மழநிலவுமாக வெண்மையும் குளிர்ச்சியும் கொண்ட திருமார்பினைக் கொண்ட மலைவல்லி (மலத்துவசன் அருமை மகள்), கற்பூரவல்லி, அபிராமவல்லி, மாணிக்கவல்லி, மரகதவல்லி, அபிஷேகவல்லி என்றழைக்கக் கூடிய மீனாட்சியம்மையை செம்மொழியான தமிழ் மொழியால் பாடப்படுகின்ற பிள்ளைத்தமிழ் நூல் சிறக்கும்படி காத்து அருள் புரிய வேண்டி விநாயக பெருமானை வேண்டுகிறார். கருநிறம் பொருந்திய கன்னத்தில் இருந்து பெருகுகின்ற மகத நீரும் கண்களினின்றுப் பிறக்கின்ற ஊழி காலத் தீயும் தங்களுக்கு வகுக்கப்பட்ட வரம்பை தாண்டாத படி தம் அகலமான குழைந்த காதுகளைக் கொண்ட விநாயக பெருமானை துதிப்போம். அயிரவணம்  என்ற சிவபெருமானது யானையை போன்று போர் புரியவல்ல யானை முக கடவுளைத் துதிப்போம்.

 

மீனாட்சி அம்மை பிள்ளை தமிழ் பாடல்களை அடுத்த வாரப் பதிவில் காண்போம்

— திருமதி கு.வை.மங்கையற்கரசி ராஜ்நாராயணன்

You Might Also Like

வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மண்டலபிஷேக பூர்த்தி விழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா

தேவி திருக்கோவில் மண்டல பூஜை விழா

கஞ்சனூர் காளியம்மன் தேர் திருவிழா

அருண் சவுண்ட் சர்வீஸ் & சப்ளையர்ஸ் சார்பில் நீர்மோர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தொண்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘அன்பா சிரியர்’ விருது

February 27, 2025 29 Views
செம்மண்குண்டு ஊரணி அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.1.03. கோடி
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் ஜகரண்டா மலர்கள்
குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் ஈரோடு ஆர்.ஏ.என்.எம் கல்லூரி
ஈரோட்டில் பிரசித்தி பெற்றகோட்டை ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?