கிருஷ்ணகிரி . மார்ச்.31
ரம்ஜான் திருவிழாவையொட்டி இறைச்சி கடைகளில்
கோழி ஆடுகள் வெட்டப்ட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் கழிவுகளை வியாபாரிகள் கட்டிகானப் பள்ளி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையோரம் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்க வண்ணத்தில் செயல்கள் இருப்பதினால் பொதுமக்கள் இது குறித்து மாநில நுகர்வோர் சங்க செயலாளர் சந்திரமோகன் அவர்களிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் இறைச்சிக் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் கடைகள் இருப்பதினால் கடைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் மேலும் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உடனடியாக அகற்றும் படி கண்டித்ததன் பேரில் இறைச்சி கழிவுகள் அகற்றப்பட்டது மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மாநில நுகர்வோர் சங்க செயலாளர் சந்திரமோகன் அவர்களை பாராட்டினர்.



