மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார். ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்து வரி பெயர் மாற்றம் வேண்டி 3 மனுக்களும், புதிய சொத்து வரி விதிப்பு வேண்டி 1 மனுவும், தெரு பெயர் மாற்றம் வேண்டி 1 மனுவும், பாதாளச் சாக்கடை இணைப்பு வேண்டி 1 மனுவும், இதர கோரிக்கைகள் வேண்டி 24 மனுக்களும் என மொத்தம் 30 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து மேயர் நேரடியாக பெற்றார். குறைதீர்க்கும் முகாமில் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மேலும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றிட வேண்டும் 67601 சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் கூறினார். தொடர்ந்து வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மருந்து பெட்டகங்களையும், அம்மருத்துவ மனையில் பிரசவித்த தாய்மாருக்கு தாய் சேய் நல பரிசு பெட்டகங்களை மேயர் வழங்கினார்கள். இம்முகாமில் கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, உதவி ஆணையாளர் சாந்தி. நகர்நல அலுவலர் மரு.இந்திரா, செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற் பொறியாளர் சுந்தரராஜன், நிர்வாக அலுவலர் அகமது இப்ராஹிம், உதவி வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் கண்காணிப்பாளர் ஆனந்தம், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



