மானாமதுரை ஏப்:29
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்மன்ற அவசரக்கூட்டமானது நகர்மன்றத் தலைவர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையிலும் துணைத்தலைவர் நகர்க்கழக துணைச்செயலாளர் பாலசுந்தரம், மற்றும் ஆணையாளர், பொறியாளர் சுகாதார அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கள்ளழகர் சித்திரைத் திருவிழாவையொட்டி இராட்டிணம், கடைகள் குத்தகை உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய கவுன்சிலர் சோம சதீஷ்குமார் தனது வார்டுப்பகுதியில் சாக்கடை பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டுமெனவும், கவுன்சிலர் இந்துமதி தனது வார்டுப் பகுதியில் மின்விளக்கு பிரச்சினை இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து நகர் இளைஞரணி அமைப்பாளர் கவூன்சிலர் மாரிக்கண்ணன், மாவட்ட மகளிரணி சண்முகப்ரியா, பாலாஜி, செல்வக்குமார் ஆகியோர் தங்களது பகுதிப்பிரச்சினைகள் குறித்து பேசினர்.
அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நகர்மன்றத்தலைவர், ஆணையாளர் ஆகியோர் உறுதியளித்ததைத் தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்றது.
இந்த நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் மாரிக்கண்ணன், வேல்முருகன், சண்முகப்ரியா , இந்துமதி, காளீஸ்வரி, சித்ரா , நாகஜோதி , சோம. சதீஷ்குமார், நதியா, பாலாஜி செல்வக்குமார், செல்வா, தேன்மொழி, புருசோத்தமன், சத்யா , லெட்சுமி, உள்ளிட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியில் தலைவர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.