குளச்சல் மே 29
குளச்சல், பாலபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் தாஸ் (50). இவர் அந்தப் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2016 சேனம் விளை பகுதியில் சேர்ந்த ஜாஸ்மின் நிர்மலா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஜாஸ்மின் நிர்மலா உடல்நிலை சரியில்லாததால் அவர்கள் அண்ணன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த டேவிட் தாஸ் கடந்த மூன்று நாட்களாக வெளியே வரவில்லை. நேற்றுமாலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து கதவை உடைத்து பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் டேவிட் தாஸ் சடலமாகக் கிடந்தார்.
போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.