கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட கரடியூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பயிலரகம் ஆலோசனைக் கூட்டம் மண்டல தலைவர் சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கே.ஜி.எஸ். சிவபிரகாஷ் ,மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், அவர்கள் கலந்துகொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் மற்றும் பூத் அளவில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடையே எடுத்துரைத்தார். இதில் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் தருமன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பெரியசாமி, கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, கிளைத் தலைவர் அருணாச்சலம் துணைத் தலைவர் சிலம்பரசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா, துணைத் தலைவர் அகிலன், டேட்டா மேனேஜ்மென்ட் தலைவர் லோகநாதன், குமரேசன் மற்றும் அனைத்து ஊராட்சி சக்திகேந்திரா பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமாக கலந்து கொண்டனர்



