வேலூர்_19
வேலூர் மாவட்டம், வேலூர் பாகாயம் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஜீர்னணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி யாகசாலை பூஜை ,இரண்டு கால யாகசாலை பூஜைகள் ,மகா கும்பாபிஷேகமும் ,சிறப்பு அலங்காரமும் ,மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பாகாயம் ஊர் பொதுமக்கள் விழா குழுவினர்கள், இளைஞர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.