திங்கள்சந்தை, ஜன-28
மாடத்தட்டு விளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்கள் தினமும் காலை திருப்பலி, மாலை ஜெபமாலை, பொது க்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.
பத்தாம் நாளான நேற்று காலை குழித்துறை மறை மாவட்ட முதன்மை பணியாளர் சேவியர் பெனடிக்ட் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டத்திருப்பலி, தொடர்ந்து மறை மாவட்ட முதன்மைச் செயலாளர் அந்தோணி எம். முத்து தலைமையில் திருவிழா திருப்பலி, பகல் 2 மணிக்கு புனிதரின் தேர் பவனி போன்றவை நடைபெற்றது.
இரவு மாடத்தட்டு விளை பங்கில் கண்தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்குதல், திருவிழா நன்கொடையாளர்கள் மற்றும் சிறப்பு குழுக்களின் பொறுப்பாளர்களை கௌரவித்தல் போன்றவை நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு பணியாளர் மரிய ராஜேந்திரன் உட்பட பங்கு மக்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்