நாகர்கோவில் – டிச – 09,
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கனேஷ் நகர் பகுதியை சேர்ந்த சக்கி என்ற ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியை சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய் கடித்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த மாணவி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு வெறி நாய்களை கட்டுபடுத்த எழுதிய கடிதம் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மாணவி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தேரி ஊராட்சியில் கணேஷ் நகர் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வெறி நாய்கள் அதிகமாக உள்ளதால் . பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினமும் வெறிநாய்கள் கடித்துக் கொண்டிருக்கிறது. நேற்று நான் கணேஷ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது தெருவில் ஒரு வெறி நாய் வந்து என்னை கடித்து விட்டது என்னைப் போன்று இந்த வழியாக செல்லும் பொது மக்களையும் கடித்துள்ளது இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் புத்தேரி ஊராட்சியில் என்னை நாய் கடித்தது போல் வேறு யாரையும் கடிக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு புத்தேரி ஊராட்சியையும் மாவட்ட நிர்வாகத்தையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாணவி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.