திண்டுக்கல், டிச:19,
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் பொழுது அம்பேத்கர், அம்பேத்கர், என கூறுவதற்கு பதிலாக இறைவன் பெயர் சொன்னால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். இதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துடன் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அமித்ஷா பேசியதை கண்டித்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இன்று காலை முதலே 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் க.மைதீன்பாவா தலைமையில் சமூக நல்லிணக்குப் பேரவை மாவட்ட அமைப்பாளர் அ.பாபு, தொகுதி செயலாளர் பெர்ணா, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் இருதயராஜ், மகளிர் அணி
மாவட்ட அமைப்பாளர் சவரியம்மாள் மகளிர் இயக்க மாவட்ட துணை அமைப்பாளர்கள் திவ்யா, தேவி கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளர் மார்ட்டின்,நகர செயலாளர் ஆனந்தராஜ் சமூக நல்லிணக்கிப் பேரவை மாவட்டதுணை அமைப்பாளர் அக்கீம்சேட் நூர்சையது சாகுல்ஹமீது இம்ரான் தொழிலாளர் விடுதலை முன்னணி இயக்க மாவட்ட அமைப்பாளர் மரியராஜ் துணை அமைப்பாளர்கள் தமிழ்வளவன் சுப்பிரமணி முத்துவீரன் ஹைதர் அலி செல்லையா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அமித் ஷாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ரயில் நிலையத்திற்கு வரும் விரைவு ரயில் முன்பு மறியலில் ஈடுபட போவதாக கூறியதை யடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் ரயில் நிலையம் வெளியே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அமித்ஷாவின் படம் பொருத்திய கொடும்பாவியை ரயில் நிலையம் முன்பே எரிக்க முயற்சித்தனர்
உடனடியாக காவல்துறையினர் கொடும்பாவியை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். மேலும்,ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.