கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜெக்கேரி கிராமத்தில், வேளாண்மைத்துறை சார்பாக, விவசாயி.இராமேஷ்பாபு த/பெ. காசப்பா அவர்கள், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், உயிர்ம மாதிரி பண்ணைத்திடல் அமைத்து பாரம்பரிய நெல் இரகமான தூயமல்லி நெல் விதையினை ரூ.10,000 (முழு மானியம்) மானிய விலையில் பெற்று சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் திரு. ஜான் லூர்து சேவியர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



