திருப்பூர், செப். 25 –
மக்களிடம் செல் அவர்களோடு வாழ் அவர்களை நேசி என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பாதையில் தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்
கழகத் தலைவர் தளபதி அவர்களின் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை திருப்பூர் வடக்கு மாவட்டம், திருப்பூர் வடக்கு ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி மற்றும் திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதியில் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மேயர் ந. தினேஷ்குமார் பார்வையிட்டு பயன் பெற்ற மக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
உடன் மாநில பிரச்சார குழு நிர்வாகி உமா மகேஸ்வரி அவர்களும் ஒன்றிய கழக செயலாளர்கள் விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், பகுதி கழகச் செயலாளர் ஜோதி, திருமுருகன்பூண்டி நகர் மன்ற தலைவர் குமார், நகர செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



