அரியலூர், ஜூலை:06
மூன்று புதிய குற்றறவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரியலூர் ரயில் நிலையத்தை வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய குற்றறவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 1 முதல் நீதிமன்றறப் பணிகளைப் புறறக்கணித்து அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 5 ஆவது நாளான வெள்ளிக்கிழமை நேற்று அரியலூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் துணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் , வழக்குரைஞர்கள் செல்ல.சுகுமார், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதே போல், அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திமுக வழக்குரைஞர்கள் அணி சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்