அரியலூர், ஜூன் 20:
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், சமஸ்கிருத மொழியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். வழக்கறிஞர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.செயலர் முத்துக்குமரன், வழக்கறிஞர் செல்ல.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
இதே போல் செந்துறை மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் காரல் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு பார் அசோசியேஷன் தலைவர் வழக்கறிஞர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. அந்தந்த நீதிமன்றம் வளாகங்கள் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.