கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாரப்பட்டி கிராமத்தில் அமைத்துள்ள அருள்மிகு
ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் நடைப்பெற்றது, இதில ஏராளமா மான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
…………………………………………
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாரப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள
பல நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ சென்றாய சுவாமி திருக்கோயில் புதியதாக புனரமைக்கப்பட்டு
மஹா கும்பாபிஷேகம்
வெகு விமர்சியாக நடைபெற்றது.
திருக்கோவிலுக்கான கும்பாபிஷேசம் உற்சவமானது நேற்று முன்தினம் கணபதி பூஜை உடன் யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து சிறப்பு ஆராதனைகள் செய்து துவங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நாளான இன்று வேத விற்பனர்களின் வேத மந்திரங்கள் முழங்க
யாக சாலையில் வைத்து வழிபட்ட பூரண கும்ப கலசங்களை தலையில் சுமந்தவாறு திருக்கோவிலை வலம் வந்தனர்.
இதைத்தொடர்ந்து
ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி திருக்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட கோபுர விமானத்தின் மீது உள்ள கும்பத்திற்கு புனித நீர் அடங்கிய கலசங்களை கொண்டு மஹா கும்பாபிேஷேகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டு, தீர்தப்பிரசாதமும் வழங்கப்பட்டது பின்னர் மூலவரான ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமிக்கு
மகா மங்கள ஆரத்தி தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர், கவுன்சிலர் வடிவேல், மற்றும் ஊர் கவுண்டர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் பாப்பாரப்பட்டி கிராம மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறுப் பகுதிகளில் இருந்து
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சென்றாய பெருமாள் சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்,
மஹா கும்பாபிஷேக விழாவினையொட்டி அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது,
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிள் சிறப்பாக செய்து இருந்தனர்.