சென்னை, கந்தன்சாவடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஆலய அறங்காவலர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் தலைமையில் நடைபெற்றது.
மஹா
கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து பக்தர்கள் மீது தீர்த்தவாரி தெளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது இதனை காண ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா குழுவின் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.