கும்பாபிஷேக பணிகள் தீவிரம்.
தேனி மாவட்டம் கம்பம் மாநகரில் எழுந்தருளி அருள்பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணியம், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ நவகிரகம் மற்றும் பரிவாதனசகீத ஸ்ரீ சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் 22 – 8 – 2024 வியாழக்கிழமை அன்று காலை 9.30.மணியிலிருந்து10 மணிக்குள் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. அது சமயம் அனைத்து பொதுமக்களும் முருக பக்தர்களும், மெய்யன்பர்களும், ஆன்மீக அன்பர்களும், தவறாமல் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமி அருள் பெற்று அருள் பிரசாதம் பெற்று செல்க.