அஞ்சுகிராமம் டிச-11
விசிக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரளிவாளன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
எழுச்சித்தமிழர் திருமாவளவனின்
அரை நூற்றாண்டு கால உழைப்பினை ஒரே மேடையில்,
மூன்று மணி நேரத்தில் காவு வாங்க துடித்த ஆதவ்வின் இடைநீக்கம் சரிதான்.
ஆதவ் அரசியல் அரிசுவடியில் கால்பதிக்கும் முன்னே
தனது மாணவர் பருவத்தில்
அரசியல் களம் கண்டவர் திருமாவளவர்.
திருமாவளவருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு
அரசியல் ஞானம் பெற்றவர்
ஆதவ் அல்ல.
மதுரை-மாட்டுதாவணியில்
தமிழ் பெயர் ஏற்பு விழா மாநாட்டில் இருக்கை இன்றி
மணல் திட்டுகளை கூட்டி முள்புதர்களின் வலியோடு
அதன் மேல் அமர்ந்து தலைவரின் உரையினை உள்வாங்கிய அரசியலை ஆதவ் அறிய வாய்ப்பு இருந்திருந்தால் தலைமைக்கு
நெருக்கடி தரும்வகையில் பேசியிருக்கமாட்டார்.
விசிக வுக்கு
பைபாஸ் வழியாக வந்தவர்
என்பதால் அவருக்கு
களஅரசியல் தெரியவாய்ப்பு
குறைவு.
குருதியை வியர்வையாக
சிந்தி,
தாலியை அடமானம் வைத்து
கட்சியை வளர்த்த
திருவாளர்களின்
வலியை காண
ஆதவ் தன்தோன்றி தனமாக பேசுவது
ஏற்புடையது அல்ல.
ஒருசிலர் ஆதவுக்கு ஆதரவாக இணையதளத்தில்
பதிவு செய்வது அவர்களின்
அரசியல் இயலாமையை
பறைசாற்றுகிறது
வன்முறையை வலிமுறையாக்கி
சாதிவெறியை மூலதனமாக்கி
அரசியல் செய்யும்
வேடதாரிகளுக்கு இடையே
கருத்தியல் ரீதியாக
விளிம்புநிலை சமூகத்தை
அமைப்பாய் திரட்டிய
ஏகலைவன் திருமாவளவரின்
அரசியலை உள்வாங்காமல்,அறிவுரைகளை ஏற்காமல் சினிமா நடிகரின் முன் புரட்சியாளர் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழாவில்
ஆதவ் அர்ஜூனின்
பிற்போக்கு பேச்சு
கண்டிக்கதக்கது.
வீச்சு வாள்களுக்கிடையே
வீரநடை போட்டு
ஈட்டிமுனைக்கு மார்காட்டும் இளைஞர்களை அணிதிரட்டிய
சேனை தலைவன்
திருமாவளவருக்கு
ஆதவ் போன்ற அதிமேதாவிகள் புத்திமதி சொல்ல தேவையில்லை என கூறியுள்ளார்.