நாகர்கோவில் செப் 27
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு வாட்சப் அல்லது எஸ் எம் எஸ் மூலமாக வங்கிகளில் இருந்து குறிப்பாக SBI வங்கியில் இருந்து அனுப்புவது போல வெகுமதி புள்ளி (SBI rewardz) ஐ கிளைம் செய்யச்சொல்லி போலியான லிங்க் அல்லது APK file உடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பபப்டுகிறது.
அதை உண்மையென நம்பி அதை தொட்டாலோ அல்லது APK file
ஐ இன்ஸ்டால் செய்தாலோ அந்த செல்போன் பயனரின் வாட்சப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு வாட்சப் டிஸ்ப்ளே புகைப்படமாக அந்த வங்கியின் லோகோ மாற்றபடுகிறது. மேலும் வாட்சப் பயனர் எந்தெந்த வாட்சப் குரூப்ல் உள்ளாரோ அந்த வாட்சப்பி குரூப்ன் லோகோ அந்த வங்கியின் பெயரில் மாற்றப்படுவதுடன் வாட்சப் பயனரின் காண்டக்ட் மற்றும் குரூப்பில் உள்ள அனைவருக்கும் மேற்கண்ட மோசடி குறுஞ்செய்தி மற்றும் APK file தானாகவே செல்கிறது.
இதை பார்க்கும் மற்ற வாட்சப் பயனாளர்களும் வங்கியிலிருந்து ரிவார்ட் பாயிண்ட் கிடைத்துள்ளது என நினைத்து அந்த குறுஞ்செய்தி மற்றும் APK File -ஐ உண்மையென நம்பி அதை இன்ஸ்டால் செய்வதால் தொடர்ந்து பலர் பாதிக்கபப்ட்டு வருகின்றனர்.
அந்த APK File யை இன்ஸ்டால் செய்தவுடனே சம்பந்தப்பட்ட வங்கியின் இணையதள பக்கம் போலவே வரும் போலியான இணைய பக்கத்தில் பயனர்கள் தங்களது இணைய வங்கி தகவல்களை பதிவு செய்தவுடன் அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது. எனவே இந்த இணைய வழி மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்கும் படி காவல்துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.