நிலக்கோட்டை செப். 16
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மருதாநதி கரையோரம் அமைந்துள்ள பாண்டிய மன்னர் காலத்தைச் சேர்ந்த, 1200 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீராஜராஜ சோழீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, விசேஷ சந்தி யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக
யாக சாலையிலிருந்து கடகம் புறப்பாடாகி புண்ணிய கலசங்கள் ஆலயம் வளம் வருதல் நிகழ்ச்சி மற்றும் திருக்கோவிலில் அனைத்து மூலஸ்தான மூர்த்திகள் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனையடுத்து கோபுர விமான கலசங்களுக்கு திருக்குட முழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பரிகார பூஜைகளும் செய்யப்பட்டது விழாவில் அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.