தஞ்சாவூர். செப்.18.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கள் கண்காட்சி மற்றும் விற்பனை யை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்கு வதற்காக கொலு பொம்மைகள் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது .இந்த ஆண்டு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டு ள்ளது. அடுத்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் களிமண் காகித கூழ், மரம், கருங்கல், ரேடியம் கொல்கத்தா களிமண் போன்ற பல வகை கைவினைப் பொருள்களி னால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது கொலு பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதியிலிருந்தும், ராஜஸ்தான் கொல்கத்தா, புனே, புது டெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு விற்பனை க்கு வைக்கப்பட்டுள்ளன கண்காட் சி இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இதை உரிய முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர் சக்தி தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்