வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32-வது வார்டில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி கருணாகரபுரி. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கோல்டன் நகர் என்.ஆர்.கே. புரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி துவக்கப்பள்ளி, புது இராமகிருஷ்ணாபுரம்,
அரசு பள்ளியில் இந்த கல்வி ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடக்குறிப்பேடுகள், புத்தகங்களை திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டல தலைவர் 32-வது திமுக வட்ட கழக செயலாளர் மக்கள் சேவகன் தம்பி ஆர் கோவிந்தராஜ் வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளிக்கு வருகை புரிந்த குழந்தை செல்வங்களுக்கு இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரிய பெருமக்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.