தஞ்சாவூர். ஜூன். 4.
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்களை பாராட்டியதோடு அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், கேடயம், நினைவு பரிசு வழங்கினார்.
பள்ளிகளை தேடி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தில் தஞ்சாவூர் நாடாளு மன்றத் தொகுதி உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேரில் சென்று ஆசிரியர் களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தஞ்சாவூர், திருவையாறு ஒரத்தநாடு, மன்னார்குடி பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 6 சட்ட சபை தொகுதிகளை உள்ளடக்கியதாகும் .இதில் பனைய கோட்டை ,பொன்னாப்பூர், கருக்காடிப்பட்டி, திருமங்கலக் கோட்டை கீழையூர், நெய்வாசல், நாட்டு சாலை, சிரமேல்குடி கழுகு புலிக்காடு, ஆவணம் ,கரிசவயல், வல்லம், பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர், மேல திருப்பந்துருத்தி ஆலங்கோட்டை ஆகிய பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
இந்தப் பள்ளிகளுக்கு முரசொலி எம்பி நேரில் சென்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.அதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
முதல் கட்டமாக தஞ்சையை அடுத்த நெய்வாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தஞ்சாவூர் எம்பி நேரில் சென்று பாராட்டினார்
இதுகுறித்து முரசொலி எம்பி கூறுகையில்
பள்ளிகளைத் தேடி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தில் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்ட சபை தொகுதியில் உள்ள அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களை பாராட்டும் வகையில் பொன்னாடை போர்த்தி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது அடுத்த கட்டமாக பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களு க்கும் வழங்கப்பட உள்ளது.
இது மாணவர்கள் ஆசிரியர் களை ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கும் என்றார்
12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி



