நாகர்கோவில், டிச. 13 –
குமரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமை வகித்தார். அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்டத்திற்குட்பட்ட மாதரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணையினை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 15.09.2023 அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இதன் கீழ் தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரு.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தற்போது இரண்டாம் கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ராகுல் குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



