நாகர்கோவில், டிச.09-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில் நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்கள், முதியோர்கள் பல்வேறு கோரிக்கைகளை சுமார் ஒரு மணி நேரம் முதல் முதல் 2 மணி நேரம் வரை நிண்ட வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகின்றனர். நீண்ட நேரமாக வரிசையில் நிற்க வைப்பது மனித உரிமை மீறிய செயலாகும்.
எனவே கோரிக்கை மனுக்கள் கொடுக்க வரும் பொது மக்களை நாற்காலியில் அமர வைத்து கோரிக்கை மனுக்கள் வாங்க வேண்டும் எனவும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்ட பொது மக்களிடம் விசாரணை செய்யாமல் பொதுமக்களிடம் வாங்கிய மனுக்களுக்கு கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி தகவல் வந்துள்ளது.
இது சம்பந்தமாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு சென்று கேட்கும் போது உங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என தகவலை கூறி வருவதாகவும் இதனால் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேறாமலே, கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டதாக குறுஞ்செய்திகளை பொய்யான தகவலை பொதுமக்களுக்கு அளித்து வரும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் தனிக் கவனம் செலுத்தி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வே. ஐயப்பன் தலைமையில்
பாதிக்கப்பட்ட மக்களுடன் இன்று குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



