கன்னியாகுமாரி பிப் 17
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு, உதவி ஆய்வாளர் ஜெய பிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் இணைந்து கன்னியாகுமரி பகுதியில் சாலையின் அருகே உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களின் முன்பும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் விபத்து இன்றி சாலையை கடக்க வசதியாகவும், பாதசாரிகள் நடந்து செல்லவும் வெள்ளை நிற கோடுகள் வரையப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை நிறக் கோடுகள் வரைந்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகன விபத்துகள் இல்லா கன்னியாகுமரி இலக்கு என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரைகள் படி கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறையினர் துரித நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.