கன்னியாகுமரி, ஜன. 16 –
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தெய்வத் தமிழ் வழிபாட்டு மன்றம் மற்றும் உலகத் தமிழர் பேரமைப்பு தமிழ்நாடு சார்பில் அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி நடந்தது.
தெய்வ தமிழ் வழிபாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் சங்க வள்ளி மணாளன் தலைமையில், தெய்வ தமிழ் வழிபாட்டு மன்ற பொறுப்பாளர் சுந்தரி முன்னிலையில் திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளுவர் சிலைக்கு முன்பு திருக்குறள் ஓதும் படி நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



