சுசீந்திரம், நவ. 21 –
சுசீந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து தாணுமாலய சுவாமி கோவில் மார்கழிப் பெருந்திருவிழா ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் தற்கால கடைகள் நடத்துவதற்கான ஏலம் நடைபெற்றது
சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் டிசம்பர் 19ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 25ஆம் தேதி மார்கழி பெருந்திருவிழாவிற்கான கொடியேற்று நிகழ்ச்சியோடு பத்து நாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழாக்களில் தற்கால கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதற்கு சுசிந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து செயல் அலுவலர் விமலா விஜி தலைமையில் இன்று ஏலம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் தற்காலிக கடை அமைப்பதற்கு 90 ஆயிரம் ரூபாயும் மார்கழிப் பெருந்திருவிழா பத்து நாட்கள் தற்காலிக கடைகள் அமைப்பதற்கு 15.50 இலட்சம் ரூபாய் ஏலம் விடப்பட்டது.



