நாகர்கோவில், ஜன. 16 –
பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மாகின் (59). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவ தினம் தனது ஆட்டோவில் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேலபுத்தேரி அருகே வரும்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் மாகின் படுகாயம் அடைந்தார். அவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மனைவி முகமது தர்ஷிமா என்பவர் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


