By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் டாஸ்மாக் கடை மூட வலியுறுத்தி நாதக மறியல்; பேரி கார்டுகளை தூக்கி வீசி கடையை அடைத்தனர்; 139 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் டாஸ்மாக் கடை மூட வலியுறுத்தி நாதக மறியல்; பேரி கார்டுகளை தூக்கி வீசி கடையை அடைத்தனர்; 139 பேர் கைது
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் டாஸ்மாக் கடை மூட வலியுறுத்தி நாதக மறியல்; பேரி கார்டுகளை தூக்கி வீசி கடையை அடைத்தனர்; 139 பேர் கைது

Last updated: November 3, 2025 5:48 pm
November 3, 2025
9 Views
Share
SHARE

இரணியல், நவ. 3 –

இரணியல் சந்திப்பு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தனியார் நடத்தும் பார் இயங்கி வந்தது. பார் செயல்படுவதை தடைசெய்ய வேண்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டது. நாம் தமிழர் போராட்டத்திற்கு பின்பு மதுக்கடை பார் மூடப்பட்டது. இதனிடையே மதுக்கடையை மூட வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்தது. இது சம்பந்தமாக ஏற்கனவே 2 முறை போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு நாம் தமிழர் கட்சி முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது. இதனால் டாஸ்மாக் கடை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 12 மணிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டது. வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது. இதனிடையே போலீசார் பாதுகாப்புக்காக இரணியல் ஜங்ஷன் பகுதியில் குவிந்தனர். அப்போது ஜங்ஷன் பகுதியில் போலீசார் வைக்கப்பட்டிருப்பதை கண்டு மாற்று வழியாக தும்பவிளை அம்மன் கோவில் சாலை வழியாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் முன்பு குவிந்தனர்.

பின் டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்காக பணிக்காக வைக்கபட்டிருந்த பேரிகாடுகளை தூக்கி நடுரோட்டில் வீசி டாஸ்மாக் கடையை அடைத்து பூட்டினர். இதனால் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் சிறுது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின் அனைவரும் டாஸ்மாக் கடையின் முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு தமிழக அரசை கண்டித்தும், மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் மாநில மகளிர் பாசறை செயலாளர் ஆன்ஷி சோபா ராணி தலைமையில் நடைபெற்றது.

மாநில மகளிர் அணி பாசறை செயலாளர் மரிய ஜெனிஃபர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், மண்டல செயலாளர் ரூபன் பெஞ்சமின், நடுவன் தொகுதி தலைவர் பெலிக்ஸ், கொள்கை பரப்புச் செயலாளர் சீலன், மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், விளவன் கோடு மகளிர் பாசறை செயலாளர் மேரி ஸ்டெல்லா உட்பட
நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்து காவல் மற்றும் மினி பேருந்துகளில் ஏற்றி நெய்யூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். ஆண்கள் 106, பெண்கள் 33 உட்பட 139 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
காமராஜர் நினைவு நாள் விழா
திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்
அஞ்சலக கிராம சபை கூட்டம்
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

லயன்ஸ் கிளப் பாராட்டு விழா

October 30, 2024
91 Views
புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா
பல ஆண்டுகளாக போராடிய பொதுமக்களுக்கு தார் சாலை வசதி!
AK குரூப்ஸ் இல்ல திறப்பு விழா நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account