பாடி, அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில்பாலாலய கலசாபிஷேக விழா.
சென்னை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை, பாடி, அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பாலாலய கலசாபிஷேக விழா நடைபெற்றது.
சாலையின் மட்டத்திற்கு கீழ் நான்கு அடி பள்ளத்திலே இறைவன் இருப்பதால் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் திருக்கோயிலை உயர்த்தி கட்டுவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல்,
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர்,
இணை ஆணையர் ஜ.முல்லை, உதவி ஆணையர் க.சிவகுமார், 7.வது மண்டலக் குழுத் தலைவர் பி.கே.மூர்த்தி, உள்ளாட்சிப் பிரதிநிதி எம்.டி.ஆர்.நாகராஜ், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், டாக்டர் பூர்ணிமா, உமா சந்தானம், செயல் அலுவலர் சசிகுமார் உட்பட
பக்தர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும்
88 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி.வி.நாகவள்ளி ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.



