நாகர்கோவில் டிச 7
இதழ் ஆசிரியர் டாக்டர் டி.ஆர்.ராஜமோகனுக்கு இந்திய மக்கள் மன்றம்,தேசிய பாரத் சேவக் சமாஜ் அமைப்பில் தேசிய துணை தலைவர் பதவி வழங்கி கௌரவிப்பு.
35 ஆண்டு காலமாக சமூகம் மற்றும் பத்திரிகை துறையில் மாபெரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து மிகச் சிறந்த சமூக செயற்பாட்டாளராக இயங்கி வருபவர் ராஜமோகன் இவர்
தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் நுகர்வோர் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்புகளை நிறுவி அதன் வழி
ஊழலுக்கு எதிராகவும் மக்கள் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அரசின் காதுகளில் கொண்டு சேர்ப்பதையே கொள்கையாக கொண்டுள்ளார். அந்த அமைப்பின் நிர்வாகி முதல் உறுப்பினர் வரை சமூக சேவையை இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர்.சமூகம் சார்ந்த சீர்கேடுகளை பொதுவெளியில் கொண்டுவருவதற்காக பத்திரிக்கை தொடங்கி அதன் மூலம் சமூகத்தில் தொடரும் இன்னல்கள் முதல் அரசாங்கம் கொண்டு வருகின்ற நல்ல திட்டங்கள் வரை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்த பெருமையும் இவருக்கு உண்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மக்கள் என்னவெல்லாம் பயன்களை பெறலாம் என்பதினை நாடு முழுவதும் முகாம் நடத்தி கல்வியறிவு பெற்றவர் முதல் பாமர மக்கள்வரை பயனுற செய்தவர் .
சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பதன் பொருட்டு அவருக்கு மத்திய அரசின் சேவை அமைப்பான இந்திய மக்கள் மன்றம் தேசிய பாரத் சேவக் சமாஜ் அமைப்பானது தேசிய துணை தலைவர் பதவியை கொடுத்து கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.