தருமபுரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்த வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி .என். வடிவேல் கவுண்டர் முன்னாள் நகர மன்ற தலைவர் அவர்களின் 13 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி நகர அரிமா சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம், காசநோய் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம் தருமபுரியில் உள்ள ரோட்டரி ஹால்லில் நடைபெற்றது. இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் காச நோய்க்கான பரிசோதனைகளை செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சண்முகம், செல்வராஜ், வினோபாஜி ,அரிமா சங்க நிர்வாகிகள் அம்ஜத், சங்கர், லட்சுமி காந்தன், அல்லிமுத்து, மருத்துவர்கள் மணிமாறன், பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.



