மதுரை ஆகஸ்ட் 23,
தென் தமிழ்நாட்டிலே முதன் முதலில் மதுரை, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி அறிமுகம்
மதுரையில் 350 படுக்கைகளுடன் புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பட்ட மருத்துவ மருத்துவமனையான மீனாட்சி சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை, தென் தமிழ்நாட்டில் லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டியை அறிமுகம் செய்த முதல் மருத்துவமனை இந்த மிக நவீன மருத்துவ உத்தியைப்பயன்படுத்தி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறைகளை இம்மருத்துவமனை சமீபத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டு இரு முதியவர்கள் உட்பட, நான்கு இதய நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றியிருக்கிறது.
ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இதயத்திலுள்ள அடைப்புகளை நீக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு டிரான்ஸ்கதீட்டர் செயல்முறையாகும். லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இரத்தத்தை எடுத்துச்செல்லும் தமனிகளுக்குள் உருவாகியிருக்கும் இரத்த உறைக்கட்டிகள் மற்றும் அடைப்புகளை ஆவியாக்கி அகற்றுவதற்கு லேசர் அலைக்கற்றைகளை (அதிக ஆற்றலுள்ள புறஊதா வெளிச்சத்தை) உமிழ்கின்ற ஒரு சிறப்பு கதீட்டரைப் பயன்படுத்துகிறது. இந்த மேம்பட்ட இதய சிகிச்சை தொழில்நுட்பமானது, அடைப்புகளை சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்கிறது மற்றும் குறிப்பிட்ட இலக்குகளுக்கு மட்டும் சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. குறிப்பாக சிக்கலான புண்களுக்கு அல்லது கால்சிய படிமங்களுக்கு சிகிச்சையளிப்பதில் இது அதிக பலனளிப்பதாக இருக்கிறது. இந்த இதய நோயாளிகளுக்கான இண்டர்வென்ஷனல் செயல் முறையான லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சைகளை, முதுநிலை இண்டர்வென்ஷனல் இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். S. செல்வமணி தலைமையில், இதயவியல் துறை தலைவர் டாக்டர். கணேசன் நம்பிராஜன், முதுநிலை இண்டர்வென்ஷனல் சிகிச்சையியல் நிபுணர் டாக்டர். R. சிவக்குமார் மற்றும் டாக்டர். சம்பத் ஆகியோருடன் இதயவியல் துறையின் நிபுணர் டாக்டர். ஜெயபாண்டியன் ஆகியோர் அடங்கிய திறன்மிக்க இதயவியல் நிபுணர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இதயவியல் துறையின் முதுநிலை இண்டர்வென்ஷனல் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர். செல்வமணி கூறியதாவது: “தீவிர மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு மார்பு வலி ஏற்படத் தொடங்கியதிலிருந்து ஆறு மணி நேரங்களுக்குள்ளும் மற்றும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளும் சிகிச்சையளிப்பது அவசியமாகும் என்றார். முதுநிலை இண்டர்வென்ஷனல் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர். ஆர். சிவக்குமார் பேசுகையில், “உறைக்கட்டிகளை மிகத்துல்லியமாக இலக்கு வைத்து ஆவியாக்கி அகற்றுவதில் லேசரின் அதிக திறன்மிக்க அடைப்பு அகற்றலை உறுதி செய்கிறது என்று விளக்கமளித்தார். இரத்தக்குழாயின் மறுசுருக்கத்திற்கு சிகிச்சையளிக்க ஆஞ்சியோ பிளாஸ்ட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்திய இதயவியல் துறையின் தலைவர் டாக்டர். கணேசன் கூறியதாவது: சவாலான இதய அடைப்புகளுள்ள நோயாளிகளுக்கு லேசர் ஆஞ்சியோ பிளாஸ்டியைப் பயன்படுத்துவது புதிய நம்பிக்கைகளையும், மேம்பட்ட சிகிச்சை விளைவுகளையும் மருத்துவர்களாகிய நாங்கள் வழங்குவதை சாத்தியமாக்குகிறது என்றார். இதயவியல் துறையின் முதுநிலை இண்டர்வென்ஷனல் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர். சம்பத் பேசுகையில், “மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிக்கலான ஆஞ்சியோ பிளாஸ்ட்டிகளுக்கு லேசர் சாதனங்களைப் பயன்படுத்துவது, அதன் இதய சிகிச்சை திறன்களில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றார்.
இந்த நவீன மருத்துவ செயல்முறை குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர்
டாக்டர். ஜெய பாண்டியன் மற்றும் அத்துறையின் இணை நிபுணர் டாக்டர். தாமஸ் சேவியர் பால் சிங், திலீப் பெர்னார்ட் அருள் பிரகாசம் ஆகியோரும் உடனிருந்தனர்.