ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச மகளிர் தின விழா வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் இணை வேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன் , துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த்
ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
பல்கலை துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணண் , பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன், மாணவர் நல இயக்குநர் முனைவர் சாம்சன் நேசராஜ் முன்னிலை வகித்தனர்.
பல்கலை மேம்பாட்டு குழு தலைவர் முனைவர் எம்.கல்பனா “குழு ஆண்டறிக்கை”யை விவரித்தார்.
மதுரை,ஜாக்கவார்ட் நிறுவனங்களின் சுயதொழில் முனைவோர் ஏ.ர்.மஹாலக்சுமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “பெண்கள் பட்டாம் பூச்சி போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக எவ்வித தடைகளையும் எதிர்கொள்ள வேண்டும்” என்றார் .
பேராசிரியர்கள் முனைவர்கள் பி.பாண்டிய ராஜம்மாள் வரவேற்புரை,
சி.சங்கீதா நன்றியுரை , டி.சண்முகப்பிரியா மற்றும்
கே.செல்வராணி ,விழா ஏற்பாடும் சிறப்பாக செய்திருந்தனர்.