கோவை மே:31
கோவையிலுள்ள கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சியான இன்டெக் 2024 ஜூன் 6 ம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது.
இது தொடர்பாக கொடிசியா தலைவர் திருஞானம், செயலர் சசிகுமார், இன்டெக் தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 495 நிறுவனங்கள் பங்கேற்று அரங்குகளை அமைக்க உள்ளனர். அமெரிக்கா தைவான் ஜெர்மன் சீனா ஜப்பான் உள்ளிட்ட ஆறு நாடுகளிலிருந்துநிறுவனங்கள் அரங்குகள் அமைக்க உள்ளன.
வர்த்தக அட்டை அல்லது தொழில் சார்ந்த அடையாள அட்டையோடு வரும் வர்த்தக பார்வையாளர்களுக்கு மட்டும் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. தொழில் சார்ந்த பார்வையாளர்களுக்கு மட்டும், செயல்விளக்கம் வழங்கப்படும்.
இண்டஸ்டிரியல் ரோபோட்டிக்ஸ் லேசர் கட்டிங் இயந்திரங்கள் காஸ்டிங் மற்றும் போர்ஜிங்ஸ் இன்ஜின் ஜெனரேட்டர் மற்றும் ஆல்டனேட்டர் ஹைட்ராலிக்ஸ் மற்றும் நியூமெட்டிக்ஸ் மெக்கானிக்கல் உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன.
ஜூன் 6ம் தேதிமுதல் 10ம் தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சியைப் பார்வையிட சுமார் 50 ஆயிரம் வர்த்தக பார்வையாளர்கள் வருவார்கள். ரூ.800 கோடிக்கு வர்த்தக விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



