ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆக:9
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் கலை மற்றும் அறிவியல் முதலாண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இணைவேந்தர் டாக்டர். அறிவழகி ஸ்ரீதரன் பேசுகையில் “கழுகு போல், பல்கலையில் பரந்திருக்கும் நல்ல வாய்ப்புகளை பற்றிக் கொண்டு முன்னேற வேண்டும் “என்றார்.
துணைத்தலைவர் முனைவர் எஸ். சசி ஆனந்த் சிறப்புரையில் “பல்கலையில் படிக்கும்பொழுதே தொழிற்சாலையில் நடைபெற்று வரும் புராஜக்ட்களை அறிந்து கொள்ளும் வகையில் பல்கலையில் உள்ள சில கம்பெனிகளின் பரிசோதனைக் கூடங் களையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.
துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன் வரவேற்புரை வழங்கினார்.
பதிவாளர் முனைவர் வே. வாசுதேவன் இயக்குநர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் டீன்கள் ஆகியோர்களை அறிமுகப்படுத்தினார்.
நாஸ்காம் தலைவர் உதயசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்க உரையாற்றினார். “மாணவர்கள் பல்கலையில் படிக்கும்பொழுது கல்வி, திறன்மேம்பாடு, சிறந்த அணுகுமுறை மேலும் பேச்சுதிறன் இவற்றில் விடாமுயற்சியுடன் உழைத்து சிறந்து விளங்கினால் அதிக ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
முதலாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி பற்றி டீன். சி. ராமலிங்கன் விவரித்தார்.
இளங்கலை, முதுகலை, வேளாண்துறை மற்றும் வணிகவியல் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் விழாவில் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் செல்வபழம் நன்றி கூறினார்.