ஈரோடு மே 2
ஈரோடு தலைமை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறை உள்ளது இதன் அருகே பிரசவம் பார்க்கப்பட்ட நச்சுக்கொடி, நேப்கின், ரத்தக்கழிவுகள் , பயன்படுத்தப்பட்ட ஊசி போன்றவைகள் குவிந்து கிடக்கின்றன
பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ள இந்த கழிவுகளினால் துர்நாற்றம் வீசுகிறது இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்
மேலும் பொது கழிப்பிடம் அருகில் மாதக்கணக்கில் வெட்டி போடப்பட்ட மரம் செடி கொடிகள் அகற்றப்படாமல் கிடக்கிறது இதனால் விஷ சந்துகள் இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் உள்ளது .இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்