நாகர்கோவில் ஜன 6
ஆதித்தமிழர்கட்சி மாவட்ட செயலாளர் சமூக ஆர்லர் குமரேசன் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
தமிழக அரசு தனது அரசாணையில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் உயரகோபுரம் அமைக்ககூடாது என ஆணை பிறப்பித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 29 வார்டு கோட்டார் ஈஸ்வரபுரம் பகுதியில் பொதுமக்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர். அதேபோல் இப்பகுதியில் அரசு ஆயுர்வேத மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தனியார் தொலை தொடர்பு நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடை இன்றி அதிவேக நெட்வொர்க்குகளை வழங்குவதற்காக (அலைக்கற்றை) பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புது டவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இப்படியே அமைக்கப்பட்டு வரும் டவருக்கு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எந்த ஒரு அனுமதி பெறாமலும், மாநகராட்சியில் இருந்து அனுமதி பெறாமலும், தகுதி இல்லாத கட்டிடத்தின் மேல்மாடியில் சட்டத்திற்கு புறம்பாக தனியார் அலைக்கற்றை நிறுவனம் அமைத்து வரும் உயர்கோபுர அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க தாங்களை பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. உடன் கோட்டார் இந்து அருந்ததியார் சமுதாய ஊர் தலைவர். சந்திரன் ஜெய்பீம் எழுச்சி இயக்க கூட்டமைப்பு தோழர்கள் ஆதித்தமிழர்கட்சி மாவட்ட தலைவர் தோழர் அண்ணாதுரை.தோழர் கிருஷ்ணமூர்த்தி சி.முருகன். ச.குமாரவேல் தோழர் பிரதாப் பகுஜன் சாமஜ் கட்சி மாவட்டதலைவர் சுதர்மண் மகளிர் அணி ராஜேஸ்வரி. பவானி.வளர்மதி. பேபி.ராஜேஸ்வரி மற்றும் ஊர்மக்கள் கலந்துகொண்டனர்.